சோனியாவும் காந்தியாகலாம்.
  • Sonia can become Gandhi

    மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி. மனிதகுல வரலாற்றிலேயே, மனிதன் ஒருவன் இந்த பூவுலகில், பிறந்து, முழுக்க முழுக்க பிற உயிர்களின் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம் என்று, சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும் வாழ்ந்த மனிதன், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி ஒருவரே. துளிகூட சுயநலம் இல்லாத மனிதன்; உண்மை, சத்தியத்தின் உருவம். பலர், ஆரம்ப காலகட்டத்தில் அனைத்துவித தீயசெயல்களிலும் ஈடுபட்டு, பிறகு ஞானதோயம் ஏற்பட்டு, உயர்ந்தவர்களாக உருமாறுவார்கள். ஆனால், காந்தி, பள்ளியில் படிக்கும்போதே, வாத்தியார், அடுத்த பையனைப் பார்த்து காப்பி அடித்து, KETTLE சரியான ஸ்பெல்லிங் எழுது என்று சொல்லியும்கூட, காப்பி அடிக்க மாட்டேன் என்று வாத்தியாரின் ஆலோசனையை, ஆணையை மீறி இருக்கின்றார். ஆக, காந்தி, வயதான பிறகு, மஹாத்மாவாகவில்லை; மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, பிறக்கும்போதே மஹாத்மாவாகத்தான், இப்பூவுலகில் பிறந்திருக்கின்றார்.

    மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பதவி, காசு, பணம், புகழ் என்ற எதையும் எதிர்பார்க்கவில்லை; மக்கள் மனதில் நம்மைப் பற்றிய நன்மதிப்பு ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புகூட இல்லை. தன் வாரிசுகளுக்கு, தன் வழித்தோன்றல்களுக்கு, வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணம்கூட, காந்தியின் மனதில் தோன்றவில்லை. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, தனது குடும்பத்தினரை, முன்னிலைப் படுத்தவில்லை. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியின் குடும்பத்தினர், யாரும், காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு, பெரிய அளவில் பொது வாழ்வில் ஈடுபடவில்லை; ஈடுபட்டு இருந்தாலும், பெரிய அளவில், ஆதாயம் அடையவும் இல்லை; ஆதாயமும் அடையவில்லை; இழப்பும் அடையவில்லை.

    மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனது குடும்பத்தினரின், தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. அவரது குடும்பத்தினரும், காந்தியின் பெயரைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. ஆதலால், இயற்கையாகவே, உலக மக்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே, காந்தியை நினைத்து, மதிக்கின்றனர். மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, எங்க தாத்தா.

    மோதிலால் நேரு, எதிர்கால கணக்குப் போட்டுத்தான் களத்தில் இறங்கினார். ஜவகர்லால் நேரு, முழுக்க முழுக்க ஆதாயத்தை அடையவே, சரியான நேரம் பார்த்து, இலவு காத்த கிளிபோல் காத்திருந்தார். ஜவகர்லால் நேரு, சற்று அனுசரித்துப்போய் இருந்தால், பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்த்து இருந்திருக்கலாம். ஜவகர்லால் நேருவால், உருவாக்கப்பட்டு, இந்திரா தயாராக இருந்தார். பிறகு, ராஜீவ். தற்பொழுது, சோனியா, மற்றும் இராகுல்.

    மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியின் வழித் தோன்றல்களைப்போல், நேரு குடும்பத்தினர், பொது வாழ்வில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்திடவில்லை. நேரு குடும்பத்தினர், பொது வாழ்வில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். பொது வாழ்வில் ஈடுபட்டு, அவர்கள் ஆதாயமும் அடைந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் அடைந்த ஆதாயத்தைவிட, அவர்கள் இழந்த இழப்பு, ஈடு செய்ய முடியாதது. நேரு குடும்பத்தினரின் இழப்பு ஈடு செய்யவே முடியாதது. அந்த அளவுக்கு, வேறு யாரும், இந்தியாவில், பொது வாழ்வில் ஈடுபட்டு, இழப்பு அடைந்ததில்லை. நேரு குடும்பத்தினரை, மற்ற அரசியல்வாதிகளின் குடும்ப அரசியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சரியன்று. மற்றவர்கள் எல்லாம், எவ்வித முதலீடுமின்றி, எவ்வித இழப்புமின்றி, அடைந்தது அனைத்தும் ஆதாயம்.

    ஆதலால், இந்திய மக்கள், கூட்டிக் கழித்துப் பார்த்து, தங்களது அன்பினை, இன்றும் நேரு குடும்பத்தினரிடம் காட்டுகின்றனர். வரலாற்றில் அரங்கேறிய நிகழ்வுகளின் காரணத்தால், நேரு குடும்பம் வேறு; இந்திய மக்கள் வேறு என்ற எண்ணம் மக்களிடம் எழுவதில்லை. இந்திய மக்கள், அளவில்லாத அன்பினை, சோனியாவிடம் காட்டுகின்றனர். இந்திய மக்கள் காட்டும் அன்பு, சோனியாவுக்கு மாபெரும் சக்தியை அளிக்கின்றது. மக்கள் அளிக்கும் சக்தியினால், இன்றைய இந்தியாவின், மாபெரும் சக்தியாக, சோனியா திகழ்கின்றார்.

  • Sonia can become Gandhi
  • Sonia can become Gandhi
  • Sonia can become Gandhi

Headlines

  • CM ChidambaraM CM Chidambaram ராகுல், தமிழகத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டுள்ளார் என்று அனைவரும் அறிகின்றனர்; ஒரு சிலரைத் தவிர.
  • The End of Economic Man Greenspan
  • மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாச்சி Autonomous State
  • தேவை: 117 MLAs 117 MLAs ஆட்சி பிடிக்க தேவையானது, 117 சட்டசபை உறுப்பினர்களே. 117 தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, இப்பவே தொகுதியில் உலா வர விடலாம். வருங்கால முதல்வர் என்று சொல்வதுபோல், வருங்கால எம்.எல்.யே என்று தொகுதியில் வலம் வர விட்டால், மக்கள் மனதில் இடம் பெற்று விடுவார்கள்.
  • காந்தியின் அப்பன். Gandhi Father

Headlines

  • August Articles Team Effort அணியில் இருப்பவர்கள் அனைவரும், களத்தில் இறங்கி விளையாடும் விளையாட்டு வீரர்கள். நாம் அனைவரும், சொகுசாக அமர்ந்து கொண்டு, அவர்களை விமர்சனம் செய்பவர்கள். ஆக, களத்தில் இறங்கி விளையாடும் வீரர்கள், வெளியில் இருப்பவர்களின் புகழ்ச்சி, இகழ்ச்சி, விமர்சனம், ஜால்ரா - இவைகளுக்கெல்லாம் மதிமயங்காமல், ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையாக செயலாற்றுவதே சிறந்த செயல்.
  • July Articles Kamaraj கல்வித்துறை காங்கிரஸுக்கு
  • June Articles Tamil Conference “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை; எந்த மதமும் இல்லை; எந்த சாதியும் இல்லை; தமிழனும் இல்லை; ஹிந்திக்காரனும் இல்லை. அனைவரும் மனிதர்களே; அதுவே சிறப்பு; அதுவே என்றும் ஒவ்வும் சிறப்பு,” என்று எடுத்துச் சொல்லி, சிறகடித்துப் பறந்து விட்டார், ரஹ்மான்.
  • Chitrapavai Akilan அகிலனின் சித்திரப்பாவை 1968 லேயே, சமுதாயம் சீரழிந்துதான் இருந்திருக்கு. இப்போது எவ்வளவோ தேவலை.
  • Tamil Dictionary தமிழ் அகராதி
16578